மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப்பில் புது நம்பரில் இருந்து ரிங் வந்தது.
இதோடு நிற்காமல், தனது ஆந்திர வட்டார நண்பர்களிடம் தமிழக நிலவரம் பற்றி மேலும் சில கருத்துகளையும் பகிர்ந்துகொண்டிருக்கிறாராம் ஆளுனர். இன்று (செப்டம்பர் 21) மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு குடியரசுத் தலைவர் வருகிறார். மகாராஷ்டிர ஆளுனர் என்ற முறையில் குடியரசுத் தலைவரை வரவேற்க செல்கிறார் வித்யாசாகர் ராவ். அங்கே குடியரசுத் தலைவரை சந்திக்கும்போது, தமிழக அரசியல் நிலவரம் பற்றி விரிவாகப் பேசி, சட்டமன்றத்தை சஸ்பெண்ட் செய்யலாம் என்பதையே தனது ஆலோசனையாக தெரிவிக்க இருப்பதாக, தனது ஆந்திர நண்பர்களிடம் கோடிட்டுக் காட்டியிருக்கிறாராம் ஆளுனர். இந்த தகவலைத்தான் போனில் பேசிய நபர் என்னிடம் சொன்னார்” என்று முடிந்தது வாட்ஸ் அப் வாய்ஸ்.
இது ஒரு வாட்ஸ்அஃப் செய்தி இதற்கு sasna networks எந்த விதத்திலும் பொறுப்பாகாது.!!
Comments