22 லட்சம் நிறுவனங்கள் இதுவரை ஒரு ரூபாய் கூட ஜிஎஸ்டி செலுத்தவில்லை.அதிர்ச்சி தகவல்; அப்போ இதுவரை நடுத்தர மக்களின் உயிரைதான் வாங்கியிருக்கிங்க; ஏவனோ ஒருத்தன் புது இந்தியா பிறக்குதுனு சொன்னான எங்க அவன்.!!
அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, ஏறக்குறைய 22 லட்சம் நிறுவனங்கள் இதுவரை ஒரு ரூபாய் கூட ஜிஎஸ்டி செலுத்தவில்லை.
இவர்கள் குறைந்தபட்சமாக 1 முதல் 30,000 ரூபாயும், அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கிட்டதட்ட 70 சதவீதம் அல்லது 32 லட்சம் தொழில்கள் இதுவரை வரி ஏதும் செலுத்தவில்லை.
தற்போது வரை சுமார் ஒரு கோடி தொழில்கள் மற்றும் சேவை அமைப்புக்கள் ஜிஎஸ்டிஎன்.,ன் கீழ் பதிவு செய்து கொண்டுள்ளன என தெரிய வந்துள்ளது.
நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வரை வருமானம் பெறுவோரிடம் இருந்து 94 முதல் 95சதவீதம் வரி வசூலாகி இருப்பதாகவும், வரி வசூல் அதிகரிக்கும் போது வரி விகிதம் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் 54 லட்சம் தொழில்கள் இதுவரை எந்த வரி விலக்கும் பெறாமல், வரி செலுத்தாமலும் இருந்து வருவதாக அரசு புள்ளி விபரம் வெளியிட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

Comments