அரசு போக்குவரத்து கழகத்தை சுந்தரா டிராவல்ஸ் என மாற்ற வேண்டி விண்ணப்பம்.!-கலாவதியான பேருந்துகளை இயக்குவதில் சென்னை முதல் இடத்தை தட்டி சென்றது.
அரசு போக்குவரத்து கழகத்தை சுந்தரா டிராவல்ஸ் என மாற்ற வேண்டி விண்ணப்பம்.!-கலாவதியான பேருந்துகளை இயக்குவதில் சென்னை முதல் இடத்தை தட்டி சென்றது.
பஸ்ல பாட்டோட சத்தம் அதிகமா கேட்டா அது பிரைவேட் பஸ். அதுவே பஸ்சோட பாட்ஸ் சத்தம் அதிகமா கேட்டா அது நம்ம கவர்மென்டு பஸ்-இப்படி காமெடி பண்ற அளவுக்கு அளவுக்கு நம்ம அரசு போக்குவரத்து கழகங்களோட நிலைமை இருக்கிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சென்னைதான் கலாவதியான பேருந்துகளை இயக்குவதில் முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை மாநகர பேருந்துகளில் 75% சதவீத பேருந்துகள் ஆயுட்காலம் முடிவடைந்தது.
பெரும்பாலும் ஒரு மாநகர பேருந்திற்கு ஆயுட்காலம் என்றால் அது 7 முதல் 10 ஆண்டுகள்தான் ஆனாலும் பேருந்தின் பல இடங்களில் ஓட்டு போட்டு அந்த ஓட்டுகளிலும் ஒரு பிட்டு போட்டு பேருந்துகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.
அப்படியே பேருந்துகள் நன்றாக ஒடினால் கடவுளுக்கே பொறுக்காமல் சாலை பிளந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது.
இந்த கணெக்கெடுப்பானது கடந்த 2009 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் அலசி ஆராய்ந்து எடுக்கப்பட்டதாகும்.
இன்னும் சென்னையை அடுத்து காலாவதியான பேருந்துகளை இயக்கும் வரிசையில் அகமதாபாத், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சண்டிகர் மற்றும் புனே ஆகியவை மாநிலங்களும் இவற்றில் அடங்கும்.

Comments