அடுத்த ஃஷிப்ட்டுக்கு ஆள் வந்தாச்சு! !! புதிய இணையதள வைரஸ்: 'பொருளாதார அழிவை ஏற்படுத்துவதே நோக்கமானதாக உள்ளது!!
உலகெங்கும் பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்துவதே புதிய 'பெட்யா' இணைய வைரஸைப் பரப்பியவர்களின் நோக்கம் என்று ஐரோப்பிய யூனியனின் இணைய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். கணினிகளின் செயல்பாட்டை முடக்கும் புதிய வகை ரான்சம்வேர் இணைய வைரஸ் உலகின் பல பாகங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஊடுருவல் மூலம் முடக்கிய கணினியை மீண்டும் செயல்பட வைக்க பிணைத் தொகை கேட்பது என்பது வெறும் கண்துடைப்பு. பாதிக்கப்பட்ட கணினியை மீண்டும் செயல்படச் செய்ய பிணைத் தொகை கோரும் நோக்கத்துடன் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்படவில்லை என்று கருத இடமிருக்கிறது. அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்துவதுதான் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களின் குறிக்கோள். கணினிகளையும் முக்கிய அமைப்புகளின் மின்னணு சேமிப்பகங்களையும் ஊடுருவித் தாக்குவதன் மூலம், அதிகபட்ச பாதிப்பையும் பொருளாதார அழிவையும் ஏற்படுத்துவதே உண்மையான நோக்கம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது என்றார் அவர். அமெரிக்காவில் அமைந்துள்ள சர்வதேச சரக்குப் போக்குவரத்துக் கப்பல் நிறுவனம் மேர்ஸ்க், மருந்து நிறுவனம் மெர்க், பிர...