பொதுவாகவே வரலாறு விந்தைகள் நிறைந்தது . அதிலும் சோழர் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தால் பல விந்தைகள் உண்டு .நான் முன்பு ஒருமுறை மூன்று சோழ மன்னர்களுக்கு முதல் மந்திரியாக இருந்த ஒட்டககூத்தரை பற்றி எழுதியிருந்தேன் இவ்வாறே ஆறு சோழ மன்னர்களைக் கண்டவரும் ஒருவர் இருக்கிறார் . அவர்தான் சோழர் குல மாணிக்கம் செம்பியன்மாதேவியார். இம்மாபெரும் பேரரசி , 1. மாமன்னன் முதலாம் பராந்தக சோழன், 2. கணவர் கண்டராதித்தன், 3. கொழுந்தன் அரிஞ்சய சோழன், 4. கொழுந்தனின் மகன் இரண்டாம் பராந்த சோழன் எனப்படும் சந்தரசோழன், 5. தன் மகன் உத்தம சோழன், 6. கொழுந்தனின் பேரன் ராசராச சோழன் காலம் வரை வாழ்ந்து சிவாலயங்களை கற்றளிகளாக்கியும், நாள் வழிபாட்டிற்கும் மாத வழிபாட்டிற்கும் நிவந்தங்கள் அளித்தும், சோழ அரசை நிலையான அரசாக்கிய குலமாணிக்கமாக திகழ்கிறார். இவர் பெயரால் பல நிவந்தங்கள் இடம்பெற்றிருப்பதை பார்க்கும்போது அப்போது பெண்கள் தமிழகத்தில் பெற்றிருந்த உயரிய நிலையை அறிய முடிகிறது .அதே காலக்கட்டத்தில் உலகெங்கும் பெண்களின் நிலை சொல்லும் படி இல்லை . இவர் ஆறு பே...