சட்டவிரோதமான பதிவுகளை தடுக்க தவறிய பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மீது ஜெர்மனி நாடு 5கோடி யூரோ அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ஜெர்மனியில் அகதிகள் மீது இனவெறியை தூண்டுதல், மற்றும் தீவிரவாத பதிவுகளை பதிவிடுவதை தடுக்க ஜெர்மனி வலியுறுத்தியும் கண்டு கொள்ளாத நிறுவனங்கள் மிது அந்நாட்டு அரசாங்கம் அபராதம் விதித்துள்ளது . அகதிகளாக வருபவர்கள் மீது வன்முறையை தூண்டுவது மற்றும் இன வெறியை தூண்டும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக பதிவிடப்படும் நபர்களின் பதிவுகளையோ, கணக்குகளை முடக்க வேண்டும் என ஜெர்மனி அறிவித்திருந்தது மீறும் பட்சத்தில் 5 கோடி யூரோ அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. #இதை 24 மணி நேரத்தில் செய்யாவிட்டால் ஃபேஸ்புக், டுவிட்டர் எங்கள் நாட்டிலிருந்து சட்டி புட்டி சாமான்களை எடுத்து கொண்டு #வெளியேறிவிட வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.